அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு வாகனங்களின் உதிரிப்பாகங்களை பரிசோதனை செய்வதற்கு தேவையான சட்டத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமென அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தரமற்ற டயர்கள் அல்லது அத்தியாவசிய உதிரிப்பாகங்களில் கோளாறு இருக்கும் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முச்சக்கர வண்டிகள் மற்றும் வேன்கள் உட்பட தனியார் போக்குவரத்துத் துறையின் சாரதிகளுக்கும் நல நிதியத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்ற அனுமதிக்கென சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.









