கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகள் பாராட்டபட்டதோடு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுடன் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாராட்டப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பல்வேறு குற்றச்செயற்பாடுகளில் ஈடுபட்ட நிலையில் வெளிநாடுகளில் தலைமறைவாகி பாதாள உலகக் குழுக்களை இயக்கும் செயற்பாட்டிலும் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச்சென்ற 05 பேர் கடந்த 27ம் திகதி இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டனர்.
அதன்போது சந்தேக நபர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்துவருவதில் முக்கியபங்களிப்பு வழங்கிய இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளும், இலங்கை பொலிஸ் அதிகாரிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் வரவேற்றிருந்தனர்.









