சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பையடுத்து உலக நாடுகள் பெரும் பாதிப்புக்களை சந்தித்துள்ள நிலையில், அண்மையில் டொனால்ட் ட்ரம்பின் தீர்வை வரிவிதிப்புக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தது. இவ்வாறான சூழ்நிலையில் உலகில் முன்னணி பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் தலைவர்களது சந்திப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தியோகபூர்வ விஜயமாக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். அவருக்கு அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பால் நெருக்கடிக்கடிக்கு உள்ளான குறித்த நாடுகள் இம்மாநாட்டில் அது குறித்து முக்கிய கலந்துரையாடல் நடத்தவுள்ளன.









