நேபாளத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 38 பேர் பலியாகினர்.
நிலச்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 30 மணித்தியாலத்தில் 29 பேரை காணவில்லை. உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் காத்மாண்டு பள்ளத்தாக்கை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.









