தான் தற்போதைய அரசாங்கத்தில் இதுவரை வகித்த அனைத்து அமைச்சு பொறுப்புக்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளதாக விஜயதாஸ ராஜபக்ஸ, அறிவித்துள்ளார்.
நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் ஆகிய அமைச்சு பொறுப்புக்களை வகித்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அதன் காரணமாக தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகவும் விஜயதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் விளக்கமளித்தார்.
கூட்டணி ஒன்றின் வேட்பாளராக களமிறங்வுள்ளதாகவும் தனது இராஜினாமா தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவுக்கு அறிவித்துள்ளதாகவும் விஜயதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டார்.









