ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி.லியனகே, சஜித் பிரேமதாச பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14ம் திகதி வரை ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் விரைவில் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நாயக்க கோரியுள்ளார். முன்கூட்டியே கட்டுப்பணம் செலுத்துவதன் மூலம் இறுதி நேரத்தில் எற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தேர்தல் தொடர்பில் 125 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.









