2024 – LPL கிண்ணத்தை ஜெப்னா கிங்ஸ் அணி கைப்பற்றியுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் கோல் மார்வெல்ஸ் அணியை 09 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டு, ஜெப்னா கிங்ஸ் அணி மீண்டும் வாகை சூடியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜெப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பானுக ராஜபக்ஷ அதிகபட்சமாக 82 ஓட்டங்களை பெற்றதுடன், டிம் செய்பர்ட் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் அசித பெர்ணாண்டோ 3 விக்கட்டுகளையும், ஜேசன் பெரண்டோப் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதற்கமைய 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெப்னா கிங்ஸ் அணி 15.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியை தனதாக்கியது.
அந்த அணி சார்பில் ரெய்லி ரொசோவ் அதிகபட்சமாக 106 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 72 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனாக ரெய்லி ரொசோவ் தெரிவானார்.









