பாடசாலை செல்லும் மாணவர்களில் ஐந்தில் ஒரு பகுதிக்கும் அதிகமானோர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுவர்கள் கட்டிளம் பருவத்தை அடையும்போது உடல் பருமன் அடையும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்யள்ளார்.
தேசிய ஊட்டச்சத்து மாதம் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பில் பங்கேற்றபோதே சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
5 வயதுக்குட்பட்ட மற்றும் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களில் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வளர்ச்சி குன்றிய நிலை விகிதம் 10.1% ஆக உள்ளதாகவும் , எடை குறைவு 16.1% ஆகவும் உள்ளதாகவும் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதிக எடை 0.5% என்ற மிகக் குறைந்த அளவில் உள்ளதெனவும் ஒரு குழந்தைகள் வளர வளர, இளமை மற்றும் நடுத்தர வயதை அடையும்போது உடல் பருமன் அடைவதாகவும்வைத்தியர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டிள்ளார்.
குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது. வயதுவந்தவர்களில் உடல் பருமன், பெண்களில் 47% ஆகவும் ஆண்களில் 30மூ% ஆகவும் காணப்பட்ட நிலையில் தற்போது பெண்களில் 15% ஆகவும் ஆண்களில் 6மூ% ஆகவும் குறைவடைந்துள்ளதாக வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
AI தரவு தகவல்கள்
உடல் சரியாகச் செயல்படத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் போதுமான அளவில் பெறாதபோது ஊட்டச்சத்து குறைபாடு (Malnutrition) ஏற்படுகிறது. இது சமச்சீரற்ற உணவு முறை அல்லது முறையான ஊட்டச்சத்தை உறிஞ்ச முடியாத மருத்துவ நிலைகளால் உருவாகிறது.
- சமச்சீரான உணவு: பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
- மருத்துவ பரிசோதனை: இரத்த பரிசோதனைகள் (CBC, Ferritin போன்றவை) மூலம் குறைபாட்டை முன்கூட்டியே கண்டறியலாம்.
- சத்து மாத்திரைகள்: மருத்துவரின் பரிந்துரைப்படி வைட்டமின் மற்றும் தாது சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.








