காலி – கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பயணிகள் 03 பேர் காயமடைந்துள்ளனர்.
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த பஸ் வண்டி வீதியை விட்டு விலகி வீதியோர மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து ஏற்படும் போது பஸ் வண்டியில் சுமார் 20 பயணிகள் வரை பயணித்துள்ளனர்.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக பஸ் வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தினால் பஸ் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.








