ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் முதியோர் இல்லமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிள்ளன. சுமார் 44 பேர் வரை அங்கு சிக்குண்டிருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் குறித்த முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கல்பாத மற்றும் ஹொரண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் குறித்த முதியோர் இல்லத்தில் 5 பேர் இருந்தததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த எண்ணிக்கை தொடர்பில் உறுதியான தகவல்களை குறிப்பிட முடியாதுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.









