ஹட்டன் – டிக்கோயா வீதியில் பாரிய பஸ் விபத்தொன்று பதிவாகியுள்ளது.
ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் பட்டல்கல பகுதியில் தனியார் பஸ் வண்டியொன்று 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர்.
மற்றொரு பஸ் வண்டிக்கு இடம்கொடுக்க முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த குறித்த பஸ் வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின்போது பஸ்சில் 35 பேர் பயணித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









