வளமான நாடு – அழகான வாழ்க்கை எனும் கொள்கைக்கமைய 9 வருடங்களின் பின்னர் உள்ளு}ராட்சி வாரம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி வாரம் இன்று முதல் எதிர்வரும் 21 ம் திகதி அமுலில் இருக்கும்.
அதற்கமைய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆரம்பதினமான இன்று நடமாடும் சேவை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சர்வதேச ஓசோன் படல பாதுகாப்பு தினத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் மர நடுகை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளு}ராட்சி மன்ற பிரதியமைச்சர் பிரபா ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
17 ம் திகதி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, அதற்கிணைவாக நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும்.
18ம் திகதி வருமான மேம்பாட்டுத்தினமாக பெயரிடப்பட்டுள்ளது.
இதனிடையே இலக்கிய மாதத்திற்கிணைவாக எதிர்வரும் 19 ம் திகதி இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டுத்தினமாகவும்,
உலக தூய்மைப்படுத்தும் தினமான செப்டெம்பர் 20ம் திகதி பொதுப்பயன்பாட்டு தினமாகவும் அறிவிக்கப்பட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும்.
இறுதிதினமான செப்டெம்பர் 21ம் திகதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், திட்டத்தின் நிறைவுதின நிகழ்வும் இடம்பெறுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளு}ராட்சி மன்ற பிரதியமைச்சர் பிரபா ருவன் செனரத் மேலும் தெரிவித்துள்ளார்.









