ஆசிய கிண்ண தொடரின் 6 ஆவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 7 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டி நேற்றைய தினம் டுபாயில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதற்கமைய 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து, 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணி சார்பில் சாஹிப்சடா பர்ஹான் 40 ஓட்டங்களையும், சஹீன் ஷா அப்ரிடி 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 3 விக்கட்டுகளையும், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் அக்ஸார் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
அதற்கமைய 128 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 131 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 47 ஓட்டங்களையும், அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பாகிஸ்தானின் பந்துவீச்சில் சய்ம் அயூப் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக 18 பந்துகளுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றிய குல்தீப் யாதவ் தெரிவானார்.
இதேவேளை ஆசிய கிண்ண தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.
தொடரின் 6 ஆவது போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் அணிகளுக்கிடையில் அபுதாபியில் நடைபெறவுள்ளது.
7 ஆவது போட்டி ஹொங்கொங் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் டுபாயில் நடைபெறவுள்ளது.









