06 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நீண்ட சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கென புதிய விதிமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
நீண்ட தூர சேவையிலுள்ள பஸ்கள் மற்றும் வேன்களுக்கே இவ்வாறு புதிய விதிகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதற்கமை 100 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் பஸ்கள் மற்றும் வேன்கள் எல்லை தாண்டிய பயணங்கள் மேற்கொள்வதற்கு முன் வாகன ஆய்வுச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படும்.
டயர்கள்இ கண்ணாடிகள் மற்றும் பிரேக்குகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
மாகாணங்களைக் கடக்கும் அனைத்து பஸ்கள் மற்றும் வேன்களும் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் இந்த ஆய்வை நடத்தி தேவையான சான்றிதழைப் பெற வேண்டுமென அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.









