கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கபுலகொட பகுதியில் தாயும், மகனும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
74 மற்றும் 25 வயதுடைய தாயும் மகனும் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை
இந்நிலையில் கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 43 வயதான நபர் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









