பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு, 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக பிரேசிலின் உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழுவினர் தண்டனையை விதித்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், போல்சனாரோ பதவியில் இருந்து விலக மறுத்து இராணுவப் புரட்சிக்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், போல்சனாரோ குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதற்கமைய ஜெய்ர் போல்சனாரோவுக்கு, 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









