களனிவெலி வழித்தடத்தின் புகையிரத சேவைகள் கொஸ்கம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த இரவுநேர புகையிரதம் , புவக்பிட்டிய மற்றும் அவிசாவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டமையினால் குறித்த சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே ரயில் தடம்புரண்ட சந்தர்ப்பத்தில் , ரயில் பாதைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சிறியரக லொறியொன்றில் மோதுண்டுள்ளது.
அதன் காரணமாக குறித்த லொறியின் சாரதி காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.









