நேபாளத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருடனான மோதல்களினால் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சமூக வலை தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் நேபாளத்தில் தடை விதிக்கப்பட்ட நிiலையில் அதற்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை அந்நாட்டின் இளம் தலைமுறையினர் முன்னெடுத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்திய நிலையில் அதன்போது மோதல் ஏற்ட்டது.
19 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்நிலையிலேயே சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்கிக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நேபாள அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
வட்ஸ்எப், பேஸ்புக், இன்ஸ்டகிரேம், லிங்ட்இன் மற்றும் யூ ட்யூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசாங்கம் தடை விதித்திருந்தது.









