இந்திய டெஸ்ட் கிரிக்கட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட ச்சட்டீஸ்வர் புஜாரா, அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ராகுல் ட்ராவிட், வீ.வீ.எஸ் லக்ஸ்மன் ஆகியோருக்கு பின்னர் இந்திய அணியின் தடுப்பு சுவராக புஜாரா போற்றப்பட்டார். இந்திய தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருநாள் மற்றும் டீ ருவென்றி போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ள போதும், ஒரு டெஸ்ட் வீரராகவே அவர் அடையாளப்படுத்தப்பட்டார். 103 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 7195 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார். 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 51 ஓட்டங்களையே பெற்றுள்ளார். முதல்தர போட்டிகள் , குழு ஏ நிலை போட்டிகளென மிகச்சிறந்த அனுபவத்தை கொண்டுள்ள புஜாரா பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரர். இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு ஜீன் மாதம் உலக டெஸ்ட் செம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட கிடைத்தமை தான் பெறும் கௌரவமாக கருதுவதாகவும், அவர் தனது ஓய்வு குறித்த அறிவிப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.









