இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சனத் ஜயசூரிய மற்றும் முத்தையா முரளிதரனின் வாரிசுகள் கிரிக்கட் போட்டிகளில் பிரகாசிக்க ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு பீ. சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியொன்றில் சனத் ஜயசூரியவின் மகன் ரனுக் ஜயசூரிய SSC அணி சார்பாக விளையாடியதோடு, முரளிதரனின் மகன் நரேன் முரளிதரன் தமிழ் யூனியன் அணிக்காக விளையாடியிருந்தார்.
எதிர்காலத்தில் சனத் மற்றும் முரளியின் அடுத்த தலைமுறையினர் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது.









