8ஆவது சர்வதேச இளையோர் அழகி போட்டியில் (Miss Teen International) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தனூஷி அமாயா கலந்துகொள்ளவுள்ளார்.
உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 40 அழகியரின் பங்கேற்புடன் இன்று (24) முதல் செப்டம்பர் 01ம் திகதி வரை இந்தியாவின் புதுடில்லி மற்றும் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகின் மிகப் பெரும் அழகிப் போட்டியாக கருதப்படும் இப்போட்டியில், பாடசாலை மாணவியான 14 வயதான தனூஷி அமாயா இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கிறார். அவர் நேற்றைய தினம் போட்டியில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு பயணித்தார்.









