ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் அரங்கேற்றப்படவுள்ளது.
எதிர்வரும் 2028ம் ஆண்டு பெரிசின் லொஸ் ஏஞ்சல்சில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
2028 ம் ஆண்டு ஜூலை 12ம் திகதி முதல் 29ம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என போட்டிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக்கிற்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டி – 20 போட்டிகளாக தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்காக அணிகளுக்கிடையே போட்டி நடைபெறும்.
நாளாந்தம் போட்டிகள் நடைபெறும். அதற்கமைய டி-20 தரவரிசையில் முதல் 6 இடங்களைப் பெறும் அணிகள் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும்.
சகல கிரிக்கட் போட்டிகளும் nலாஸ் ஏஞ்சல்சில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பொமோனாவின் ஃபேர்லேக்கில் கட்டப்பட்ட தற்காலிக மைதானத்தில் நடைபெறுமென போட்டிக்குழு அறிவித்துள்ளது.









