மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா போதைப்பொபொருள் மீட்கப்பட்டுள்ளது.இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கேரள கஞ்சா போதைப்பொபொருள் இன்றைய தினம் கைப்பற்றபட்டுள்ளது.
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள 30வது காற்றாலை கோபுரத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித் கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









