பொலன்னறுவைலுள்ள அரிசி ஆலைகளில் இன்று விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்போது அரிசி ஆலைகளில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவு, கையிருப்பு மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரிசியின் அளவு ஆகியவை குறித்த அறிக்கை பெறப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய, அனைத்து அரிசி ஆலைகளின் தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்படவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் Fwpj;j தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அரிசியின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை குறைக்குமாறு அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் உன்னிப்பாக செயற்படுமாறும், முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடை முறைப்படுத்துமாறும் நுகர்வோர் அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.









