2027ம் ஆண்டு மே மாதம்இ தனது பதவிக்காலம் முடிவடையும் வரை தான் ஜனாதிபதி பதவியில் நீடிக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பதவியேற்ற மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆளும் கட்சி தோல்வியடைந்தது. வாக்கெடுப்பில் 577 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் 331 உறுப்பினர்கள் பார்னியர் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதனையடுத்து பிரான்ஸின் ஆட்சி கவிழ்ந்தது.
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனும் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் அந்நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சி வாயிலாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் உரையாற்றினார். விரைவில் புதிய பிரதமரை அறிவிக்கவுள்ளதாகவும் 2027ம் ஆண்டு மே மாதம், தனது பதவிக்காலம் முடிவடையும் வரை தான் ஜனாதிபதி பதவியில் நீடிக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் தெரிவித்துள்ளார்.
மக்கள் தனக்கு வழங்கிய பொறுப்பில் இறுதிவரை பணியாற்றவுள்ளதாகவும் ,அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வரவுசெலவு திட்டம் தயாரிக்கப்படுமெனவும் ,இடதுசாரி கட்சிகள் குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்வதாகவும் ,அவர் மேலும் தெரிவித்துள்ளார்.









