ஜே.பி. டுமினி JP Duminy தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாபிரிக்க வெள்ளைப்பந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். டுமினி கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ரொப் வோல்டரின் உதவி பயிற்சியாளர் குழாமில் ஒரு பகுதியாக நியமிக்கப்பட்டார்.
மார்க் பௌச்சர் சகாப்தத்திற்குப் பின்னர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் புதிய பயிற்சியாளர்களை உறுதிப்படுத்தியபோது, டுமினி பயிற்சியாளர்கள் குழாமில் இணைக்கப்பட்டார்.
டுமினி ஏற்கனவே SA20யில் பெர்ல் ரோயல்ஸ் Paarl Royals மற்றும் உள்நாட்டு அணியான போலண்டின் Boland அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயற்ப்பட்டார். இந்நிலையில் அவரது உடனடி எதிர்கால திட்டம் தொடர்பிலும் அடுத்தக்கட்ட செயற்பாடுகள் குறித்தும் டுமினி எதனையும் இதுவரை வெளிபடுத்தவில்லை.









