பிரபஞ்சத்தில் சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை எங்கும் கண்டிராத அளவுக்கு இது மிகவும் பிரகாசமாக உள்ளதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மத்தியில் கருந்துளைகளுடன் விண்மீன் திரள்கள் சூழ்ந்த இவ்வகையாக ஒளிரும் விடயம் குவாசர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கருந்துளைகளில் வாயு மற்றும் தூசிகள் சேரும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுகிறது.
இதுவே அதன் ஒளிரும் தன்மைக்குக் காரணமாக அமைத்துள்ளது. இந்நிலையில்தான் இதுவரை கண்டறியப்படாத பிரகாசமான குவாசர் கண்டறியப்பட்டுள்ளது.
சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமுடைய இந்த குவாசருக்கு J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ளது
இந்த குவாசர் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், அதன் ஒளி நம்மை வந்தடைய 12 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.









