நிலவில் மேற்கொள்ளவிருந்த முக்கிய ஆய்வுத்திட்ட பணியை நாசா கைவிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தின் மேற்கு முனையில் நீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கிறதா? நிலவில் பனி அடுக்குகள் எங்குள்ளன. அதிலுள்ள மூலக்கூறுகள் எவை? உள்ளிட்ட பல விடயங்களை ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் தீர்மானித்தனர். எனினும் நாசா கோரிய நிதியை விட 8.5 சதவீதம் குறைவான நிதியையே அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ளது. இதனால் திட்டத்தை கைவிட நாசா தீர்மானித்துள்ளது. இதேவேளை நிலவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது நிலவு குறித்த அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.









