2026 க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளன. செப்டம்பர் 5 ஆம் திகதி வரை 2026 க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக்கா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 2,532 மையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை அதிபர்கள் தமது வலயத்தில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான கல்விப் பிரதி அல்லது உதவிப் பணிப்பாளரிடம் இருந்து அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பரீட்சார்த்திகள் தங்களது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை ஓகஸ்ட் 3 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை இணையவழியில் மேற்கொள்ளவேண்டும்.
குறித்த காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாதென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டிய பாடசாலைப் பரீட்சார்த்திகள், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தேவையான திருத்தங்களை இணையவழியில் செய்துகொள்ள வேண்டும்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அதே இணையத்தளத்திற்குச் சென்று தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களைச் மேற்கொள்ளலாம்.








