வத்தளைப் பகுதியில் ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணிடமிருந்து ஒரு கிலோ 140 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 538 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பெண் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.









