மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின், ஹைலெவல் வீதி, மீகொடை சந்திக்கு அருகில் நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு (31), அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக வந்த கெப் வண்டியொன்று, வீதியோரம் அமைக்கப்பட்டிருந்த தானசாலை ஒன்றில் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் கட்டுப்பாட்டை இழந்து புகுந்ததில் குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த பெண்களில் 15 வயது சிறுமி ஒருவரும் உள்ளடங்கின்றார்.
விபத்து இடம்பெற்ற போது தப்பியோட முயன்ற சாரதி கெப் ரக வாகனத்துடன் கொடகம சந்தியில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளால் உடனடியாக கைது செய்துசெய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பிலியந்தலையைச் சேர்ந்த 42 வயதுடைய குறித்த சாரதி, விபத்து இடம்பெற்ற போது கடுமையான குடிபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 7 பேர் ஹோமாகம வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதுடன், மீகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








