தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நாட்டின் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த, மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ,நாளை மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்குமெனவும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுதப்ப்பட்டுள்ளனர்.
மேலும் பதுளை மாவட்டத்தி பண்டாரவளை , களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, கண்டி மாவட்டத்தின் உடபலாத, பாதஹேவாஹெட்ட, கங்க இஹல கோரளை, அக்குரணை,கங்கவட்ட கோரளை, தொலுவ, பஸ்பாகே கோரளை கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, ரம்புக்கனை, மாவனல்லை, கேகாலை, புலத்கோஹுபிட்டியஇ, யட்டியாந்தோட்டை, குருநாகல் மாவட்டத்தின் ரிதீகம, மாத்தளைமாவட்டத்தின் ரிதிகம, நெலுவ, அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை ,மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாயஇ, படல்கும்புர , இரத்தினபுரி மாவட்டத்தின் கலவானை, கொடகவெல மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விழிப்புடன் இருக்குமாறு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:









