2025 உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல், ஏற்றுக்கொள்ளப்படுமென இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் மே 19 ம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும்.
உயர்தர பரீட்சை முடிவுகள் கடந்த மார்ச் 31 ம் திகதி வெளியிடப்பட்டன.
நாடுமுழுவதும் 2,362 மையங்களில் , 281,810 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு பங்கேற்றிருந்தனர்.
அவர்களில் 221,413 பேர் பாடசாலை மாணவர்கள். 60,397 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்.
அதற்கமைய 176,527 பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.









