11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிகொண்ட குஷ் மற்றும் ஹேஷ் ரக போதைப்பொருட்களுடன் 22 பிக்குக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு விமான நிலையத்தில் நடத்திய சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமான பிக்குக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிக்குக்கள் கொண்டு வந்திருந்த பயணப் பைகளில் பாடசாலை உபகரணங்கள், இனிப்புகள் மற்றும் போலிப் பைகள் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும்இ அவற்றில் 110 கிலோ கிராமுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹேஷ் ரக போதைப்பொருட்கள் கைப்பற்றபட்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு பிக்குக்களின் பயணப் பையிலும் 5 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் காணப்பட்டதாகவும், சந்தேகநபர்களான பிக்குக்கள் நபர் ஒருவர் வழங்கிய விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி கடந்த 22ம் திகதி தாய்லாந்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் துறவிக் கோலத்தை விடுத்துஇ சிவில் உடைகளை அணிந்து பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் புகைப்படம் மற்றும் காணொளிகள் அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் பிக்குக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.









