தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இரண்டு பஸ்வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று (26) காலை 9.20 மணியளவில் தனியார் பஸ்வண்டி ஒன்றும்,இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்வண்டி ஒன்றும் மோதிய நிலையில் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 11 பேர் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையிலுள்ளதாகத் வைத்தியசாலை தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாகத் தனியார் பஸ்வண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்வண்டியின் சாரதி தப்பியோடியுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









