நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி, சைபர் மோசடியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவம் தொடர்பாக சட்ட துறையினர் மற்றும் ஏனைய தொடர்புபட்ட நிறுவனங்களிடமும் முறைப்பாடுகளை அளித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதற்கட்ட உள்ளக விசாரணை ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதிகாரிகள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
22.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்த வேண்டியிருந்த நிலையில் , குறித்த கடனுக்கான தவணையாக திறைசேரியினால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் தொகை, கணினி ஹெக்கர் ஒருவருக்குச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.









