உலகில் மிகப்பெரிய எண்ணெய் வளம்மிக்க நாடான வெனிசுலாவின் எண்ணெய் விற்பனையை காலவரையறையின்றி கட்டுப்படுத்தப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெனிசுலாவின் எண்ணெய் இருப்புக்களை சுரண்டக்கூடாதென ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளது.
வெனிசுலா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் இறையாண்மையை மீறுவதாக அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
வெனிசுலாவின் நிர்வாகத்தை பறித்து, அதன் எண்ணெய் இருப்புக்களை சுரண்டுவது தொடர்பாக அமெரிக்க ஜனபாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஏனைய அதிகாரிகளின் அறிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதெனவும் ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.









