நாட்டில் இன்றைய தினமும் கனமழைக்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய,வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணி முதல் , எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு குறித்த எச்சரிக்கை நேரத்திற்கு அமுலில் இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது தொடர்ந்து அமுலில் இருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பல ஆற்றுப் படுகைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.









