இந்திய கிரிக்கெட் அணியின் சூழல் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அமித் மிஸ்ரா 68 சர்வதேச போட்டிகளில் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 42 வயதான மிஸ்ரா அமைதியாக தனது ஓய்வை அறிவிக்கவில்லை. விராட் கோலி உள்ளிட்ட தனது முன்னாள் அணித்தலைவர்கள் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தனது பல வருட விரக்தியை அமித் மிஸ்ரா வெளிப்படுத்தியுள்ளார். அணித்தெரிவில் திறமை பெரும்பாலும் மதிக்கப்படவில்லையெனவும், அரசியல் மற்றும் பாரபட்சம் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது திறமையை வெளிப்படுத்திய போதிலும், தொடர்ந்து ஒதுக்கப்பட்டதாகவும் அணியில் விளையாடும் 11 பேரில் இடம்பெறுவதற்காக போராடியதாகவும் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
2003ம் ஆண்டு இந்திய தேசிய அணியில் அறிமுகமான அவரின் இறுதி சர்வதேச போட்டி 2017ம் ஆண்டில் காணப்பட்டது.
வாய்ப்புகள் கிடைக்காமையினால் ஏற்பட்ட வலி ஒருபோதும் முழுமையாக நீங்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருசில வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் ஏனையோர் வாய்ப்புக்களுக்காக தம்மை நிரூபிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் ,சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களுடனும், எம்.எஸ். தோனி போன்ற தலைவர்களுடனும், ரோஹித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திரங்களுடனும் 25 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியுள்ளதாகவும் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் மரியாதை, அடையாளம் மற்றும் நோக்கம் உள்ளிட்ட எல்லாவற்றையும் கொடுத்ததாகவும்
தான் மனப்பூர்வமாக விளையாடிளதாகவும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டதாகவும் அமித் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.









