கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இஷார செவ்வந்தியை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இஷார செவ்வந்தி நாட்டைவிட்டு தப்பிச்சென்றுள்ள நிலையில் சர்வதேச பொலிசாரின் ஒத்துழைப்புடன் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது. இஷார செவ்வந்தி தொடர்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே சில விடயங்களை கூறியிருந்தார். கணேமுல்ல சஞ்ஜீவ கொலை செய்யப்பட்டு சில தினங்களில் இஷார செவ்வந்தி துபாய்க்கு தப்பிச்சென்றதாக கெஹெல்பத்தர பத்மே குறிப்பிட்டிருந்த நிலையில் அதன் உண்மைத்தன்மை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.









