2025 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை இவ்வாரத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்
கடந்த 27ம் திகதியுடன் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவுசெய்யப்பட்டன. நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 43 பாடசாலைகளில் விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தற்போது பரீட்சை பெறுபேறுகளை பரிசீலிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது. அதற்கமை இறுதிக்கட்ட பெறுபேறு பரிசீலனை நடவடிக்கை நிறைவடைந்ததும், இவ்வாரத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.









