அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிச்செல் ஸ்டர்க், ருவென்றி – 20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். அடுத்த வருடத்தின் இறுதிப்பகுதியில் நடைபெறவுள்ள பல்வேறு டெஸ்;ட் போட்டிகளில் கவனம் செலுத்தும் நோக்கிலும், 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிகள் குறித்து கவனம் செலுத்தும் நோக்கிலும் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக மிச்செல் ஸ்டர்க் அறிவித்துள்ளார். அடுத்த வருடம் அவுஸ்திரேலிய அணி பல்வேறு முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 35 வயதான மிச்செல் ஸ்டர்க் இதுவரை 65 , டி – ருவென்றி சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதோடு, 79 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2021ம் ஆண்டு டி – ருவென்றி உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியிலும் மிச்செல் ஸ்டர்க் இடம்பிடித்திருந்தார். ருவென்றி – 20 போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு நிமிடத்தையும் விரும்பியதாகவும், எனினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் குறித்து கவனம் செலுத்தும் நோக்கில் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் மிச்செல் ஸ்டர்க், அறிவித்துள்ளார்.









