இலங்கையணி 2019ம் ஆண்டின் பின்னர் இருதரப்பு ஒருநாள் தொடரொன்றை வெளிநாடொன்றில் வெற்றிகொண்டுள்ளது. ஸ்கொட்லாந்து அணியை 2019ம் ஆண்டு இரு தரப்பு தொடரொன்றில் இலங்கையணி இறுதியாக வெற்றிகொண்டிருந்தது.
6 வருடங்களின் பின்னர் சிம்பாப்பே அணியை சொந்த மண்ணில் இலங்கை வெற்றிகொண்டுள்ளது. இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற அடிப்படையில் இலங்கையணி வெற்றிகொண்டது.
சிம்பாப்பே அணியினர் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கையணிக்கு சிறப்பான ஆட்டதிறனை வெளிப்படுத்தி நெருக்கடியை வழங்கினர். இறுதி ஓவர் வரை போட்டி முன்னோக்கி நகர்ந்தமை, ரசிகர்களுக்கு சுவாரஷ்யத்தை வழங்கியது.
அசலங்க தலைமையிலான இலங்கையணி, பந்துவீச்சு , துடுப்பாட்டம், களத்தடுப்பு என சகல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டிருந்தது.
நேற்றைய 2வது போட்டியின் ஆட்டநாயகனாக பெத்தும் நிசங்க தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடர் நாயகனாகவும் அவரே தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.









