செம்மணியில் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வின்போது ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன் அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர் இ சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









