கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீடு திரும்பியுள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில், வீடு திரும்பியுள்ளார்.
அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினாலும், வைத்திய ஆலோசனையின்படி வீட்டிலேயே ஓய்வெடுப்பாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க வீட்டில் தங்கியிருக்கும் போது அவரது உடல்நிலையை குடும்ப வைத்தியர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.









