இலங்கை அணியின் முன்னாள் வீரர் திசர பெரேரா தனது மனைவி நிஷி ஹதரசிங்கவுடன் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார். விஜயராமயிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அண்மையில் திசர பெரேரா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில், குறித்த குழந்தையை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷவிடம் காண்பித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்தும் தொழில்முறை கிரிக்கட் போட்டிகளில் விளையாடிவரும் திசர பெரேரா, சிறப்பாக செயற்பட வேண்டுமென மஹிந்த ராஜபக்ஷ அதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அவரது மகள் திசாரா அவியானாவுக்கு உலகை வெற்றிக்கொள்வதற்கான இயலுமை கிடைக்கவேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்தியுள்ளார்.









