தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று 6வது நாளாகவும் தொடர்கிறது.
கடந்த 17ம் திகதி போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடருமென தபால் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.









