முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு இருதய நோய்இ நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாலும் அவர் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் பிணை விண்ணப்பத்தை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என அவரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
எனினும் பிணைமனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 26ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.









