யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் பணி எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
யாழ்ப்பாணக் கச்சேரி நல்லூர் வீதியின் பக்கமாக இதற்கான பிரத்தியேக கட்டிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாத்தறை, குருநாகல், கண்டி பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்கும் நிலை வழமைக்கு திரும்பியுள்ளது.
அதற்கமைய கடவுச்சீட்டுக்களை வழங்கும் 06 அலுவலகங்கள் தற்போது காணப்படுகின்றன.
அடுத்த வருடம் அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் பாஸ்போட், தேசிய அடையாள அட்டை வழங்கும் அலுவலகங்களைத் திறந்து அதிகாரத்தை மக்களது காலடிக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.









