கர்ப்பம் தரித்து 10 மாதங்கள் குழந்தையை சுமந்து பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக வைத்தியர் ஜாங் கெபெங் தலைமையிலான குழுவினர் உலகின் முதலாவது குழந்தை பிரசவிக்கும் ரோபோவை உருவாக்கி வருகின்றனர்.
குறித்த ரோபோக்கள் தற்போது காணப்படும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல எனவும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்ட ரோபோக்கள் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை எம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட குறித்த செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படக்கூடியது.
கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.
கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன.









